தேசியம்
செய்திகள்

பழங்குடியின பெண்களை பாதுகாக்கும் பொறுப்பில் மத்திய அரசு தவறி வருகிறது

பழங்குடியின பெண்களையும் சிறுமிகளையும் பாதுகாக்கும் பொறுப்பில் மத்திய அரசு தவறி வருவதாக முதற்குடியின உறவுகளுக்கான அமைச்சர் தெரிவித்தார்

நான்கு பெண்களைக் கொன்றதாக கூறப்படும் ஒரு ஆண் மீது Winnipeg காவல்துறை குற்றம் சாட்டியதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக அமைச்சர் Marc Miller தெரிவித்தார்..

ஒரு அழிவுகரமான வரலாற்றின் மரபு இன்றும் எதிரொலிக்கிறது என அமைச்சர் கூறினார்.

முதற்குடியினப் பெண்களை பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் தள்ளும் சில முறையான சிக்கல்களைத் தீர்ப்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றும் என அமைச்சர் Miller தெரிவித்தார்.

கடந்த May மாதம் ஒரு முதற்குடியின பெண்ணை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது, மேலும் இரண்டு முதற்குடியின பெண்கள் உட்பட மூன்று பெண்களை கொலை செய்த குற்றச்சாட்டுக்களை Winnipeg காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

Related posts

பிரதமர் பெரும்பான்மை அரசை ஒன்றிணைக்க முயற்சிக்கிறார்: Andrew Scheer குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

பிரதமர் Trudeau – முதல்வர் Ford சந்திப்பு

Lankathas Pathmanathan

குழந்தைகளுக்கான ஆரம்ப COVID தடுப்பூசி சோதனை தரவை Health கனடாவுக்கு சமர்ப்பித்துள்ளோம்: Pfizer அறிவிப்பு

Gaya Raja

Leave a Comment