தேசியம்
செய்திகள்

பழங்குடியின பெண்களை பாதுகாக்கும் பொறுப்பில் மத்திய அரசு தவறி வருகிறது

பழங்குடியின பெண்களையும் சிறுமிகளையும் பாதுகாக்கும் பொறுப்பில் மத்திய அரசு தவறி வருவதாக முதற்குடியின உறவுகளுக்கான அமைச்சர் தெரிவித்தார்

நான்கு பெண்களைக் கொன்றதாக கூறப்படும் ஒரு ஆண் மீது Winnipeg காவல்துறை குற்றம் சாட்டியதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக அமைச்சர் Marc Miller தெரிவித்தார்..

ஒரு அழிவுகரமான வரலாற்றின் மரபு இன்றும் எதிரொலிக்கிறது என அமைச்சர் கூறினார்.

முதற்குடியினப் பெண்களை பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் தள்ளும் சில முறையான சிக்கல்களைத் தீர்ப்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றும் என அமைச்சர் Miller தெரிவித்தார்.

கடந்த May மாதம் ஒரு முதற்குடியின பெண்ணை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது, மேலும் இரண்டு முதற்குடியின பெண்கள் உட்பட மூன்று பெண்களை கொலை செய்த குற்றச்சாட்டுக்களை Winnipeg காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

Related posts

மத்திய அரசாங்க ஊழியர்களுக்கான புதிய COVID தடுப்பூசி கொள்கை இந்த வாரம் வெளியாகிறது!

Lankathas Pathmanathan

புதிதாக பதிவாகும் பாதிக்கும் மேலானவை தொற்றின் மாறுபாடுகள்: புதிய modelling தரவுகளின் தகவல்

Gaya Raja

Quebec தீ விபத்தில் இரண்டாவது சடலம் மீட்பு

Lankathas Pathmanathan

Leave a Comment