தேசியம்
செய்திகள்

கத்திக் குத்துச் சம்பவத்தில் மரணமடைந்த தமிழர் அடையாளம் காணப்பட்டார்

கடந்த வாரம் North York நகரில் கத்திக் குத்துச் சம்பவத்தில் மரணமடைந்த தமிழர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை இரவு நிகழ்ந்த கத்திக் குத்துச் சம்பவத்தில் பலியானவர் பிரபாகரன் திருச்செல்வம் என குடும்பத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

24 வயதான Newscastle, Ontarioவை சேர்ந்த இவரது மரணம் குறித்து 22 வயது இளைஞன் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது

Torontoவைச் சேர்ந்த 22 வயதான Haroon Imran என்பவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

இவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இதுவரை நிருபிக்கப்படவில்லை.

இந்த சம்பவத்தில் 25 வயதுடைய ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இவரும் தமிழர் என தெரியவருகிறது.

Related posts

மீண்டும் வட்டி விகித உயர்வை அறிவித்த கனடிய மத்திய வங்கி!

Lankathas Pathmanathan

British Colombiaவில் ஒரு RCMP அதிகாரி பலி – இருவர் காயம்!

Lankathas Pathmanathan

Toronto காவல்துறை அதிகாரி கத்தியால் குத்தப்பட்டார்!

Lankathas Pathmanathan

Leave a Comment