தேசியம்
செய்திகள்

கத்திக் குத்துச் சம்பவத்தில் மரணமடைந்த தமிழர் அடையாளம் காணப்பட்டார்

கடந்த வாரம் North York நகரில் கத்திக் குத்துச் சம்பவத்தில் மரணமடைந்த தமிழர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை இரவு நிகழ்ந்த கத்திக் குத்துச் சம்பவத்தில் பலியானவர் பிரபாகரன் திருச்செல்வம் என குடும்பத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

24 வயதான Newscastle, Ontarioவை சேர்ந்த இவரது மரணம் குறித்து 22 வயது இளைஞன் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது

Torontoவைச் சேர்ந்த 22 வயதான Haroon Imran என்பவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

இவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இதுவரை நிருபிக்கப்படவில்லை.

இந்த சம்பவத்தில் 25 வயதுடைய ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இவரும் தமிழர் என தெரியவருகிறது.

Related posts

கனடாவில் 77 உறுதிப்படுத்தப்பட்ட monkeypox தொற்றுக்கள்

Lankathas Pathmanathan

அரசாங்கத்திற்கு எதிராக அடுத்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு?

Lankathas Pathmanathan

B.C. NDP அரசாங்கத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment