தேசியம்
செய்திகள்

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் 675 ஆயிரம் பேர் வாக்களிக்கலாம்

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் வாக்களிக்க சுமார் 675 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த எண்ணிக்கை கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சார வெற்றியை பிரதிபலிக்கிறது என கட்சியின் பிரதிநிதிகள் வியாழக்கிழமை (30) தெரிவித்தனர்.

கடந்த February மாதம் 113 ஆயிரமாக இருந்த கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை, June மாதம் 3ஆம் திகதிவரை 675 ஆயிரமாக அதிகரித்தது.

புதிய கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க June மாதம் 3ஆம் திகதிக்குள் கட்சியின் உறுப்பினராக இணைந்து கொள்ள வேண்டும் என்பது அவசியமானதாகும்.

ஆறு வேட்பாளர்கள் Conservative கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

Related posts

Texas பாடசாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் அஞ்சலி

Lankathas Pathmanathan

Scarborough வணிக வளாகத்தில் சந்தேகத்திற்குரிய மரணம்?

Lankathas Pathmanathan

உக்ரைன் இறையாண்மை கொண்ட நாடாக நிலைத்திருக்க முடியும்: கனடிய பிரதமர் நம்பிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment