தேசியம்
செய்திகள்

கடவுச் சீட்டுக்காக எதிர்கொள்ளப்படும் காத்திருப்பு நேரம் ஏற்றுக்கொள்ள முடியாதது: அமைச்சர் Gould

கடவுச்சீட்டு செயலாக்கத் தாமதங்களை மிகவும் கடுமையான தாமதங்கள் எதிர்கொள்ளப்படும் முக்கிய நகர்ப்புற மையங்களில் அதிகரிக்க கடவுச்சீட்டு சேவைகளுக்கு பொறுப்பான அமைச்சர் Karina Gould உத்தரவிட்டுள்ளார்.

கடவுச் சீட்டுக்காக தற்போது எதிர்கொள்ளப்படும் காத்திருப்பு நேரம் ஏற்றுக்கொள்ள முடியாதது என கூறிய அமைச்சர் Gould, நிலைமையை சரி செய்ய பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என தெரிவித்தார்.

கடவுச்சீட்டுகளுக்கு பொறுப்பான service கனடா, தீவிரமான வாடிக்கையாளர்களை குறிவைக்கும் அணுகுமுறை நடவடிக்கைகளை செயல்படுத்தும் என குடும்பங்கள், குழந்தைகள், சமூக மேம்பாட்டு அமைச்சர் Gould கூறினார்.

இந்த நடவடிக்கை இந்த வாரம் Montrealலில் ஆரம்பமானது.

இந்த வழிமுறை Torontoவிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் June 27 முதல் பிற முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சு, புள்ளியியல் திணைக்களம், கனடா வருவாய் முகாமை திணைக்களம் ஆகியவற்றின் பணியாளர்களும் கடவுட்சீட்டு செயலாக்க நடவடிக்கைளில் உதவுகின்றனர்.

Related posts

ஐரோப்பாவிற்கு ஒரு வார விஜயத்தை முடித்தார் குடிவரவு அமைச்சர் Fraser

Lankathas Pathmanathan

Ontario Liberal தலைமைப் பதவிக்கு போட்டியிட தயாராகும் Mississauga நகர முதல்வர்

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 14ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment