February 12, 2025
தேசியம்
செய்திகள்

ஐ.நா. உலக உணவுத் திட்டத்துக்கு 250 மில்லியன் டொலர்களை வழங்கும் கனடா

உலகளாவிய ரீதியில் எதிர்கொள்ளப்படும் பட்டினியின் அச்சுறுத்தலுக்கான காரணம் ரஷ்யா என பிரதமர் Justin Trudeau குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் உலகளாவிய உணவு நெருக்கடியை எதிர்கொள்ள கனடா, ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்துக்கு கூடுதலாக 250 மில்லியன் டொலர்களை வழங்குகின்றது.

10 நாள் சர்வதேச நாடுகளுக்கான பயணமொன்றை ருவாண்டாவில் ஆரம்பித்துள்ள பிரதமர், இந்த உதவியை வியாழக்கிழமை (23) அறிவித்தார்.

வெள்ளிக்கிழமை முதல் பிரதமர் 53 பொதுநலவாய நாடுகளின் தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

இதில் பஞ்சத்தின் வேதனையை எதிர் கொள்ளும் நாடுகளின் தலைவர்களையும் Trudeau சந்திக்கவுள்ளார்.

2018 ஆம் ஆண்டின் பின்னர் முதல் முறையாக பொதுநலவாய நாடுகளின் தலைவர்களை Trudeau சந்திக்கின்றார்.

Related posts

இலங்கையில் மனித உரிமை நிலை சீர்குலைந்து செல்வது கவலையளிக்கின்றது: கனடா

Lankathas Pathmanathan

கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்ட OPP அதிகாரியின் இறுதிச் சடங்கு

Lankathas Pathmanathan

Manitobaவில் விரைவில் அமைச்சரவை மாற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment