தேசியம்
செய்திகள்

பயணிகள் எதிர்கொள்ளும் காலதாமதத்தைத் தணிக்க மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

பயணிகள் எதிர்கொள்ளும் காலதாமதத்தைத் தணிக்க மேலும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை Toronto Pearson சர்வதேச விமான நிலைய நடத்துனர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது நடைமுறையில் உள்ள COVID பரிசோதனைகளை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டும் என Toronto பெரும்பாக விமான நிலைய ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இன்னும் சில தினங்களில் சர்வதேச பயணிகள் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தின் முதல் வாரத்தில் Pearson சர்வதேச விமான நிலையத்தில் 10 சதவீதம் வரையிலான Air Canada விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

விமான நிலையங்களில் ஏற்படும் கால தாமதங்களை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக புதன்கிழமை மத்திய அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜோர்டான் மன்னர் கனடா வருகை!

Lankathas Pathmanathan

பொது ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தம் குறித்து நாடாளுமன்றில் விவாதம்

Lankathas Pathmanathan

ஜேர்மனியில் கனேடிய பிரஜை மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment