தேசியம்
செய்திகள்

உக்ரைனுக்கான தூதரக சேவைகள் போலந்தில் தொடரும்

Kyiv தூதரகத்தை மீண்டும் திறக்க உக்ரைனுக்கான தனது தூதர் Larisa Galadzaவை கனடா திருப்பி அனுப்பியுள்ளது.

ஆனாலும் முழுமையான இராஜதந்திர நடவடிக்கைகள் எப்போது ஆரம்பிக்கும் என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

தொடர்ந்தும் போலந்தில் தூதரக சேவைகள் தொடரும் என வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (08) உக்ரைன் பயணித்த பிரதமர் Justin Trudeau தலைமையிலான அதிகாரிகள் குழு, கனடியக் கொடியை ஏற்றி தூதரகத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர்.

கடந்த February மாதத்தில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர், கனடா தனது தூதரகத்தை மூடியது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர் வாழ்த்து

Lankathas Pathmanathan

மனநல நெருக்கடியை எதிர் கொள்பவர்களுக்கு அவசர உதவி இலக்கம் அறிமுகம்

Lankathas Pathmanathan

ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 43 கனேடியர்கள் வெளியேறினர்!

Gaya Raja

Leave a Comment