தேசியம்
செய்திகள்

உக்ரைனுக்கான தூதரக சேவைகள் போலந்தில் தொடரும்

Kyiv தூதரகத்தை மீண்டும் திறக்க உக்ரைனுக்கான தனது தூதர் Larisa Galadzaவை கனடா திருப்பி அனுப்பியுள்ளது.

ஆனாலும் முழுமையான இராஜதந்திர நடவடிக்கைகள் எப்போது ஆரம்பிக்கும் என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

தொடர்ந்தும் போலந்தில் தூதரக சேவைகள் தொடரும் என வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (08) உக்ரைன் பயணித்த பிரதமர் Justin Trudeau தலைமையிலான அதிகாரிகள் குழு, கனடியக் கொடியை ஏற்றி தூதரகத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர்.

கடந்த February மாதத்தில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர், கனடா தனது தூதரகத்தை மூடியது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடளாவிய ரீதியில் புதன்கிழமை மொத்தம் 2,626 தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

ஆறு மாதங்களில் பயணத்திற்காக $14.6 மில்லியன் செலவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

Lankathas Pathmanathan

பதவி விலகும் John Toryயின் முடிவு சரியானது: துணைப் பிரதமர் Chrystia Freeland

Lankathas Pathmanathan

Leave a Comment