கனடா வலிமையுடனும், நம்பிக்கையுடனும் இருப்பதாக பிரதமர் Mark Carney தெரிவித்தார்.
ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நாடு திரும்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இலையுதிர் கால கூட்டத் தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை (21) ஆரம்பிக்கவுள்ள நிலையில் Liberal கட்சியினரிடையே வெள்ளிக்கிழமை (18) அவர் உரையாற்றினார்.
இன்றைய சர்வதேச வர்த்தக போர் சூழல்களுக்கு மத்தியிலும் கனடா வலிமையுடனும், நம்பிக்கையுடனும் இருப்பதாக Mark Carney தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் கூட்டத்தொடரில் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்களைக் கொண்டுவர தனது அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
சமூக ஊடகப் பாதுகாப்பு குறித்த சட்டங்களை முன்னெடுக்க போவதாகவும் Mark Carney உறுதியளித்தார்.
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட digital பாதுகாப்புத் துறைகளிலும் கனடா உலகிற்கே வழிகாட்ட முடியும் என தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய கனடாவை ஒரு புதிய, சக்தி வாய்ந்த, நம்பிக்கையான, ஒன்றுபட்ட நாடு என பிரதமர் பெருமையுடன் விவரித்தார்.
