அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களுக்கு தடை விதிக்கும் புதிய உத்தரவு வெளியானது.
கனடாவின் மதுபானங்கள், பால் பொருட்கள், மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட சில முக்கிய பொருட்களுக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவுகளில் அமெரிக்க ஜனாதிபதி கையெழுத்திட்டார்.
Donald Trump இந்த நிர்வாக உத்தரவுகளில் செவ்வாய்க்கிழமை (08) கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் மதுபானம், வாகனங்கள், பால் வர்த்தகத்திற்கு எதிராக கனடா காட்டும் பாகுபாடு அமெரிக்க ஏற்றுமதியாளர்களை பாதிப்பதாக கூறி, இந்த புதிய இறக்குமதி தடையை Donald Trump நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தத் தடை எதிர்வரும் 29-ஆம் திகதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வர உள்ளது.
அமெரிக்க அரசு ஒப்பந்தங்களை கனடா பெறுவதை தடுக்குமாறு Donald Trump அமெரிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட சில மணி நேரங்களிலேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடவடிக்கைகளை கனடா உன்னிப்பாக அவதானித்து வருவதாக கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc தெரிவித்தார்.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியுடன் தான் தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கும் போது, இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக உறவை நோக்கி கனடா நேர்மையுடன் செயல்படும் எனவும் Dominic LeBlanc தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை கடந்த மாதம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளும் விதித்த வரிகள் அமுலுக்கு வந்தன.
கனடாவின் எதிர் வரிகள் செவ்வாய் நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த நிலையில், கனடியர்கள் கடுமையான காலங்களை எதிர்கொள்ள நேரிடும் என கனடிய பிரதமர் Mark Carney தனது உரை ஒன்றில் எச்சரித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
