நேபாளம், சீனாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் 24 கனடியர்கள் காணாமல் போயுள்ளனர்.
இந்த வெள்ளப் பெருக்கில் குறைந்தது 98 பேர் உயிரிழந்தனர்.
நேபாளம், சீனாவின் எல்லைப் பகுதியில் புதன்கிழமை (26) ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கை தொடர்ந்து, கனடாவைச் சேர்ந்த 24 பேர் காணாமல் போயுள்ளதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், தொழிலாளர்கள், பிறரின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது.
திடீர் வெள்ளப் பெருக்கில் 341 வெளிநாட்டினர் உட்பட 403 பேர் காணாமல் போனதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்களில் 24 கனடியர்கள் அடங்குகின்றனர் என நேபாள சுற்றுலா வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கனடிய அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
சூழ்நிலையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக கூறிய அமைச்சர், தேவைக்கேற்ப உதவிகளை வழங்க தயாராக உள்ளதாகவும் கூறினார்.
அந்தப் பகுதியில் உள்ள கனடியர்களுக்கு உதவ தமது உள்ளூர் அதிகாரிகள் தயாராக உள்ளதாகவும் கனடிய வெளிவிவகார அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
