அமெரிக்காவுடனான வர்த்தகப் போருக்கு மத்தியில், Ontario சட்டமன்றம் மீண்டும் கூட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Ontario மாகாணத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், Ontario சட்டமன்றத்தைக் கூட்டுமாறு Doug Ford-டை வலியுறுத்தி வருகின்றன.
அமெரிக்காவின் வரி கட்டணச் சலுகை நடவடிக்கைகளை விவாதித்து சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கான கோரிக்கையாக இது அமைந்துள்ளது.
ஆனால் முதல்வர் Doug Ford இதனை ஒரு‘அற்ப அரசியல்’ நகர்வு என விமர்சித்து நிராகரித்தார்.
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் முறிந்த நிலையில் வார இறுதியில் தீவிரமடைந்தது.
அதைத் தொடர்ந்து, கனடிய பேச்சுவார்த்தை குழுவினரை பிரதமர் Mark Carney மீண்டும் நாடு திரும்ப அழைத்தார்.
இதன் காரணமாக பொருள், பல பில்லியன் டாலர் மதிப்பிலான கனடியப் பொருட்கள் மீது சனிக்கிழமை 50 சதவீத அமெரிக்க இறக்குமதி வரிகள் நடைமுறைக்கு வந்தன.
இதற்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்கத் தயாரிப்புகளுக்கு, அமெரிக்கா விதித்துள்ள அதே அளவில் சுங்க வரிகளை கனடாவும் விதிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சட்டமன்றம் மீண்டும் கூடி, சிறந்த நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என Ontario மாகாண எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றனர்.
“Ontario மக்கள் தங்கள் தலைவர்கள் தங்களுக்கு ஆதரவாக முன்வருவதை எதிர்பார்க்கிறார்கள்,” என NDP தலைவர் Marit Stiles கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதியின் ஆபத்தான சுங்க வரிகளுக்கு எதிரான போராட்டத்தில் உடனடியாக பணியாற்றத் தொடங்குவது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாகிய எங்கள் கடமையாகும் என ஒரு அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.
சட்டமன்றம் மீண்டும் கூட்டாமல் முறையான கொள்கை ஆய்வைத் தவிர்க்கவே Doug Ford விரும்புவதாக Ontario Liberal கட்சியின் இடைக்காலத் தலைவர் John Fraser கூறினார்.
தொழிலாளர் தினத்திற்கு பின்னர் அரசியல்வாதிகள் சட்டமன்றத்திற்கு திரும்புவார்கள் என முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனாலும் Doug Ford அரசாங்கம், சட்டமன்றம் மீண்டும் கூடுவதை October இறுதி வரை தாமதப்படுத்தி உள்ளது.
