British Colombia -வில் காட்டுத் தீயின் விளைவாக 80 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார்.
Summerland, British Colombia-வில் சனிக்கிழமை (08) இந்த சம்பவம் நிகழ்ந்தது.
Meadow Valley பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து குடும்ப உறுப்பினர் ஒருவருடன் வெளியேற முயன்றபோது அவர் திடீரென உயிரிழந்ததாக Penticton RCMP தெரிவித்தது.
அந்தப் பெண்ணின் மரணம் காட்டுத் தீயின் விளைவாக ஏற்பட்டதாக RCMP நம்புகிற போதிலும், British Colombia மரண விசாரணை அதிகாரி இதை உறுதிப்படுத்தவில்லை.
இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் அதிகாரிகள் நெருக்கமாகப் பணியாற்றி அவர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றனர் என RCMP ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
காட்டுத்தீ தொடர்பான வேறு எந்த உயிரிழப்புகளும் தம்மிடம் தெரிவிக்கப்படவில்லை எனவும் RCMP மேலும் தெரிவித்தது.
காட்டுத்தீ காரணமாக, Summerland, அதை அண்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
வேகமாகப் பரவி வரும் இந்த காட்டுத்தீ காரணமாக British Colombia மாகாண அரசாங்கம் கடந்த சனியன்று அவசர நிலையை அறிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
