Toronto நகர மையத்தில் அமைந்துள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மீது மீண்டும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
திங்கட்கிழமை (27) அதிகாலை அமெரிக்க துணைத் தூதரக கட்டிடத்தின் மீது இனந்தெரியாத ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை தொடர்ந்து Toronto காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திங்கள் அதிகாலையில் அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு வெளியே குறைந்தது ஒரு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை தொடர்ந்து, அங்கு பெருமளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
துணைத் தூதரகத்தை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பதை காவல்துறை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
இருந்தபோதிலும் நான்கு மாதங்களுக்கு முன்னர் மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இக்கட்டிடம் இலக்கண நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
வெள்ளை நிற வாகனம் ஒன்று அந்தப் பகுதியிலிருந்து தப்பிச் செல்வது காணப்பட்டது.
ஆனால், சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்த எந்தத் தகவலையும் காவல்துறை வெளியிடவில்லை.
March 10 நடைபெற்ற முந்தைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக பல சந்தேக நபர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதை காவல்துறை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், அமெரிக்க துணைத் தூதரக கட்டிடத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த இளைஞர்கள் பணிக்கப்பட்ட ஒரு gun-for-hire திட்டம் இது என புலனாய்வாளர்களால் விவரிக்கப்பட்டது.
March துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தக் கட்டிடத்தின் மீது 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளுமாறு காவலர்கள் பணிக்கப்பட்டனர்.
திங்கள் காலையில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தைக் கேட்டது அந்த அதிகாரிகள்தான் என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியது.
திங்கள் அதிகாலை சுமார் 4:45 மணியளவில், University and Queen Street அருகில் அமைந்துள்ள அமெரிக்க துணைத் தூதரக கட்டிடத்திற்கு வெளியே ஒரு தோட்டா உறை கண்டெடுக்கப்பட்டது.
Toronto நகர மையத்தில் உள்ள இந்த அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு ஓரளவு பாதுகாப்பு இருக்கும் அதே வேளையில், Ottawa-வில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு உள்ள அதே அளவிலான பாதுகாப்பு இந்தக் கட்டிடத்திற்கு இல்லை என முன்னர் தெரிவிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
