Montreal விமான நிலையத்தில் தரையிறங்கிய Air கனடா விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற சம்பவம் நிகழ்ந்தது.
வியாழக்கிழமை (09) பிற்பகல் Montréal-Pierre Elliott Trudeau சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் Air கனடா விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றது.
இது விமான நிலையத்தின் செயல்பாடுகளில் தாமதங்களை ஏற்படுத்தியது.
இதனால் எவருக்கும் காயம் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என Air கனடா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் Los Angeles சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணித்த விமானம் Montreal சர்வதேச விமான நிலையத்தில் வழக்கமான முறையில் தரையிறங்கியது.
பின்னர் அந்த விமானம் பிரதான ஓடுபாதையில் இருந்து வெளியேறும் போது ஓடுபாதையை விட்டு விலகி புல்வெளிப் பகுதி வழியாகச் சென்றது.
ஆனாலும் அனைத்து பயணிகளும் விமானக் குழுவினரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு முனையத்தில் இருப்பதாக விமான நிறுவனம் உறுதிப்படுத்தியது.
இந்த விமானத்தில் 156 பயணிகள் ஆறு பணியாளர்கள் இருந்ததாக Air கனடா கூறுகிறது.
இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடைபெறும் எனவும் Air கனடா உறுதியளித்தது.
கனடாவின் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியமும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக உறுதிப்படுத்தியது.
இந்த விசாரணைக்காக மூடப்பட்டிருந்த விமான நிலையத்தின் வடக்கு ஓடுபாதை இரவு 10 மணி அளவில் மீண்டும் திறக்கப்பட்டதாக தெரியவருகிறது.
