FIFA போட்டி நடைபெறும் இடங்களுக்கு அருகே Toronto காவல்துறையினர் இதுவரை 20 drone-களைக் கைப்பற்றியுள்ளனர்.
பாதுகாப்புக் காரணங்களை மேற்கோள்காட்டி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
அனுமதியின்றி இயக்கப்படும் drone-கள் காயங்கள், விபத்துகளை ஏற்படுத்துவதுடன் பார்வையாளர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என கூறி, உலகக் கோப்பை போட்டிகள் ஆரம்பித்ததிலிருந்து Toronto காவல்துறையினர் drone-களுக்கு அனுமதி மறுத்துள்ளது.
அதைத் தாண்டியும் அனுமதியின்றி இயக்கப்பட்ட 20 drone-களை Toronto காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
Toronto பல உலகக் கோப்பை போட்டிகளை நடத்தி வரும் நிலையில Toronto மைதானம், அதிகாரப்பூர்வ இரசிகர் திருவிழா நடைபெறும் பகுதியைச் சுற்றி தற்காலிக விமானப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளன.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி drone-கலைப் பறக்கவிடும் எவரும் கனடிய விமானப் போக்குவரத்து விதிமுறைகளின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
கால்பந்து போட்டி நடைபெறும் காலத்தில் இந்த விதிமுறைகளை அமுல்படுத்துவதற்கு Transport கனடா, காவல்துறை அதிகாரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
ஆனாலும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நிகழ்வுகளின் ஒளிபரப்புக்காகவும் பல அங்கீகரிக்கப்பட்ட drone-கள் பறக்கவிடப்படுகின்றன என காவல்துறை உறுதிப்படுத்துகிறது.
தவிரவும் Toronto-வைத் தாண்டியும், போட்டிகளில் பங்கேற்கும் சர்வதேச அணிகள் தங்கியுள்ள நகரங்களிலும் drone-களுக்கு அனுமதி தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
