Venezuela நிலநடுக்கத்தில் கனடியர்களுக்கு உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை இல்லை கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
புதன்கிழமை (24) மாலை Venezuela-வைத் இரண்டு பலமான நிலநடுக்கங்கள் தாக்கின
இதில் குறைந்தது 589 பேர் உயிரிழந்ததாகவும், 2,980 பேர் காயமடைந்ததாகவும் Venezuela-வின் இடைக்கால ஜனாதிபதி Delcy Rodríguez வெள்ளிக்கிழமை (26) தெரிவித்தார்.
ஆனாலும் இந்த எண்ணிக்கை மேலும் பெருமளவில் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் Venezuela-வில் 740 கனடியர்கள் தற்போது இருப்பதாக பதிவு செய்துள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆனால் இரட்டை நிலநடுக்கங்களால் கனடியர்கள் எவரும் பாதிக்கப்பட்டது குறித்த தகவல்கள் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு கூறியது.
அவசரகால தூதரக உதவி தேவைப்படும் கனடியர்கள், கனடிய வெளிவிவகார அமைச்சின் அவசர கால கண்காணிப்பு பிரிவை தொடர்பு கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
Venezuela-வுக்கு முதற்கட்டமாக $5 மில்லியன் மனிதாபிமான உதவியை கனடா வழங்கும் என பிரதமர் Mark Carney வியாழக்கிழமை (25) அறிவித்தார்.
இந்த நிதி எங்கு ஒதுக்கப்படும் என்பது குறித்த மேலதிக தகவல்கள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Venezuela-வை தாக்கிய 7.2 , 7.5 richter அளவு கொண்ட நில நடுக்கங்கள், கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காலத்தில் அந்த நாட்டைத் தாக்கிய மிக வலிமையான நிலநடுக்கங்களாகும்.
