Toronto நகரில் உயிரிழப்பு ஏற்படுத்தும் விபத்துகள் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளன.
Toronto நகரில் வேக கண்காணிப்பு camera-களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, உயிரிழப்பு ஏற்படுத்தும் விபத்துகள் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளன.
Toronto நகர முதல்வர் Olivia Chow இந்தத் தகவலை வெளியிட்டார்.
கிடைக்கப் பெற்றுள்ள புதிய புள்ளிவிவரங்கள் ‘அதிர்ச்சியூட்டுவதாக’ Olivia Chow தெரிவித்தார்.
Doug Ford அரசாங்கம் தானியங்கி வேக கண்காணிப்பு camera-களை தடை செய்த ஆறு மாதங்களில் Toronto நகரில் உயிரிழப்பு ஏற்படுத்தும் விபத்துகள் கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
November 14, 2025 அன்று தானியங்கி வேக கட்டுப்பாட்டு அமுலாக்க நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, வாகனங்களின் வேகம், அதனால் ஏற்படும் சாலை விபத்து மரணங்கள் குறித்து ஆய்வு செய்த அறிக்கை ஒன்றை நகரசபை புதன்கிழமை (24) பரிசீளித்தது.
Toronto நகரம் முழுவதும் 104 வெவ்வேறு இடங்களில் போக்குவரத்து முறைகளை நகரம் ஆய்வு செய்தது.
December 2025 முதல், அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை விட குறைந்தது மணிக்கு 11 KM கூடுதல் வேகத்தில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்துள்ளதை இத்தரவு காட்டுகிறது.
தானியங்கி வேக கட்டுப்பாட்டு அமுலாக்க நடவடிக்கைகள் முடிவடைந்ததை தொடர்ந்து, 2025 December 1 முதல் 2026 May 31 வரையிலான இடைப்பட்ட காலத்தில் Toronto வீதிகளில் உயிரிழப்பை ஏற்படுத்திய 25 விபத்துகள் நிகழ்ந்தன எனவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
