முஸ்லிம் பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Durham பேருந்தில் hijab அணிந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரை Toronto காவல்துறையினர் கைது செய்தனர்.
Toronto-வைச் சேர்ந்த 36 வயதான திருக்குமரன் கந்தசாமி என்பவர் தாக்குதல், குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளின் பேரில் புதன்கிழமை (17) கைது செய்யப்பட்டார்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் Scarborough-வில் பயணித்துக் கொண்டிருந்த Durham பேருந்தில், வெறுப்புணர்ச்சி தூண்டப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் தொடர்பாக இவர் செய்யப்பட்டுள்ளார்.
April 13 அன்று Progress Avenue – Milner Avenue சந்திப்புப் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் பேருந்தில் இருந்த போது பாதிக்கப்பட்டவரை அணுகி, பல இழிவான, இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை தாக்கியதாகவும், சிறிது நேரம் கழித்து பேருந்திலிருந்து இறங்கியதாகவும் காவல்துறை ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் காணொளியில் பதிவு செய்யப்பட்டு, கனடிய முஸ்லிம்களின் தேசிய சபையால் (National Council of Canadian Muslims – NCCM) சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டது.
பாதிக்கப்பட்ட hijab அணிந்த பெண்ணை ஒரு கட்டத்தில் சந்தேக நபர் “பயங்கரவாதி” என அழைப்பது காணொளியில் பதிவாகியுள்ளது.
அந்தப் பெண்ணை ஒருவர் எழுந்து உதைப்பதற்கு முன்னர், தகாத வார்த்தைகளால் திட்டுவது ஒளிப்பதிவில் கேட்கக் கூடியதாக உள்ளது.
இந்த விசாரணையை Toronto காவல்துறை சேவையின் வெறுப்புக் குற்றப்பிரிவு நடத்தியது.
இதில் குற்றம் சாட்டப்பட்டவர் இந்தக் கோடையின் பிற்பகுதியில் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார்.
இவருக்கு எதிரான குற்றசாட்டுகள் எதுவும் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை .
