எந்தவொரு நாடும் புதிய உலக ஒழுங்கை வரையறுக்காது என கனடிய பிரதமர் Mark Carney கூறுகிறார்.
புதிய உலக ஒழுங்கை எந்த ஒரு நாடோ அல்லது நிறுவனமோ வரையறுக்க முடியாது என கனடிய பிரதமர் தெரிவித்தார்.
G7 மாநாடு திங்கட்கிழமை (15) ஆரம்பிப்பதற்கு முன்னதாக Mark, Carney இந்தக் கருத்தை தெரிவித்தார்.
ஒரு குறிப்பிட்ட நிறுவனக் குழுவோ அல்லது நாடுகளோ எல்லா பதில்களையும் கொண்டிராத ஒரு புதிய உலக ஒழுங்கில், அமெரிக்கா ஒரு பங்கை வகிக்கும் என கனடிய பிரதமர் கூறினார்.
G7 மாநாட்டில் தனது உத்தியானது, பிரச்சினைக்கு ஏற்ப மாறுபடும் எனத் தெரிவித்த அவர், தற்காலிகக் கூட்டணிகளை அமைப்பதில் கனடா கவனம் செலுத்தும் எனவும் கூறினார்.
