மின்சாரக் கட்டணத்தை குறைக்கும் திட்டத்தை பிரதமர் Mark Carney வெளியிட்டார்.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தூய்மையான மின்சாரத் திட்டத்தை பிரதமர் Mark Carney வியாழக்கிழமை (14) வெளியிட்டார்.
இந்தத் திட்டம் கனடியக் குடும்பங்களில் 70 சதவிகிதத்தினருக்கு எரிசக்திச் செலவுகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என கூறப்படுகிறது.
திரவ இயற்கை எரிவாயு (LNG) மின் உற்பத்தி நிலையங்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை அளிக்கவும், 2050-ஆம் ஆண்டுக்குள் கனடாவின் மின்சாரக் கட்டமைப்பை இரட்டிப்பாக்கவும் உதவும் வகையில், தூய்மையான மின்சார விதிமுறைகளை சீரமைக்க Mark Carney அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த கட்டுமானப் பணிகளுக்கு $1 டிரில்லியனுக்கும் அதிகமாக செலவாகும் எனவும், அந்தச் செலவின் ஒரு பகுதியை ஈடுசெய்ய பொது நிதி பயன்படுத்தப்படும் எனவும் இந்தத் திட்டம் கூறுகிறது.
“அடுத்த சில தசாப்தங்களில் மின் உற்பத்தியை இரட்டிப்பாக்க மிகப்பெரிய முதலீடு தேவைப்படும்,” என நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் கூறினார்.
