கனடாவின் எந்தப் பகுதியிலும் நடத்தப்படும் எந்த ஒரு பொது வாக்கெடுப்பும் சட்டத்தின் ஆட்சியுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என பிரதமர் Mark Carney தெரிவித்தார்.
Alberta பிரிவினைவாத இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து Mark Carney தனது கருத்தை முன்வைத்தார்.
Alberta பிரிவினைவாதிகள் பொது வாக்கெடுப்புக்காக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது தொடர்பான தனது அணுகுமுறை குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் ஆரம்பத்தில் இருந்து நாம் செயல்பட்டு வருவதைப் போலவே தொடர்ந்து செயல்படுவோம் என அவர் கூறினார்.
பொது வாக்கெடுப்பு மனுவுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான கையொப்பங்களை சேகரித்து Alberta தேர்தல் ஆணையகத்திடம் கையளித்துள்ளதாக பிரிவினைவாதிகள் தெரிவித்துள்ள நிலையில் பிரதமரின் இந்தக் கருத்து வெளியானது.
Alberta மக்களுக்காகவும், முதற்குடி மக்களுக்காகவும், அனைத்து கனடியர்களுக்காகவும் நாட்டைச் செயல்பட வைப்பது தனது அணுகுமுறையாகும் என Mark Carney மேலும் கூறினார்.
Alberta மாகாணத்தில் October 19 அன்று ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வாக்கெடுப்பில் பிரிவினை குறித்த கேள்வியை Alberta வாக்காளர்கள் எதிர்கொள்ளும் சாத்தியக்கூறு தோன்றியுள்ளது.
