தேசியம்
செய்திகள்

Royal Military கல்லூரியில் நிகழ்ந்த சம்பவத்தில் முப்படைகளின் பயிற்சி பெறும் நான்கு மாணவர்கள் பலி

Kingston நகரில் உள்ள Royal Military கல்லூரியில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றில் முப்படைகளின் பயிற்சி பெறும் மாணவர்கள் நால்வர் கொல்லப்பட்டனர்.

வாகனத்துடன் தொடர்புடைய இந்த சம்பவம் Kingston Ontarioவில் இன்று அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்தது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தேசிய பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
பலியானவர்கள் Jack Hogarth, Andrei Honciu, Broden Murphy, Andrès Salek என அடையாளம் காணப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் Justin Trudeau, Ontario முதல்வர் Doug Ford உட்பட பலரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த இழப்புகள்  குறித்து அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக தேசிய பாதுகாப்புத் துறை  கூறியுள்ளது.

Related posts

Saskatchewan மாகாணத்திலும் அவசரகால நிலை!

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 31ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

March இறுதிக்குள் Ontario வரவு செலவுத் திட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment