தேசியம்
செய்திகள்

தன்னை ஒரு காவல்துறை அதிகாரி என அடையாளப் படுத்திய தமிழ் இளைஞர் கைது

தன்னை ஒரு காவல்துறை அதிகாரி என அடையாளப் படுத்திய தமிழ்  இளைஞரை  York பிராந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Markham நகரை சேர்ந்த 25 வயதான ஜெனிசன் ஜெயக்குமார் என்பவர் கைதாகியுள்ளார்.

Markham massage நிலையத்தில் இலவச பாலியல் சேவைக்கான அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், இவர் தன்னை ஒரு காவல்துறை அதிகாரி என அடையாள படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த சம்பவம் கடந்த 8ஆம் திகதி நிகழ்ந்தது.

கைது செய்யப்பட்டவர் காவல்துறையில் பணியாற்றவில்லை என்பதை York காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

இனிவரும் காலத்தில்  இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (29)  இவரது புகைப்படத்தை வெளியிட்டனர்.

 இவர் மீதான குற்றச்சாட்டுகள் எவையும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தாக்குதல் பிரிவுத் துப்பாக்கிகள் மீது தடை விதிப்பதாகப் பிரதம மந்திரி அறிவித்துள்ளார் | Prime Minister announces ban on assault-style firearms

thesiyam

கனடிய நாடாளுமன்றம், தூதரகங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது

Lankathas Pathmanathan

தொழிலாளர்களுக்கும், வணிகங்களுக்கும் COVID உதவித் தகுதிகளை தற்காலிகமாக விரிவுபடுத்தும் அரசாங்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment