கனடிய பிரதமருக்கு எதிராக இணையத்தில் மிரட்டல் விடுத்ததாக Winnipeg நபர் கைது செய்யப்பட்டார்.
இவர் பிரதமர் Mark Carney-யை குறி வைத்து சமூக ஊடகங்களில் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
யூத, முஸ்லிம் சமூகங்களுக்கு எதிராக இவர் வெறுப்பைத் தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள தனது கூட்டாட்சி காவல் தேசிய பாதுகாப்பு அமுலாக்கப் பிரிவு January 16 அன்று X தளத்தில் ஒரு பயனர் குறித்து விசாரணை ஆரம்பித்ததாக RCMP ஒரு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த விசாரணையில் 55 வயதான Winnipeg நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டு குற்றம் சாட்டப்பட்டது.
அவர் February 13 அன்று கைது செய்யப்பட்டு, மரணம் அல்லது உடல் ரீதியான தீங்கு விளைவிப்பதாக மிரட்டல் விடுத்ததாக மூன்று குற்றச்சாட்டுகள் பதிவாகின.
காவலில் வைக்கப்பட்டுள்ள அவர் இந்த மாத இறுதியில் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்படவுள்ளார்.
தமது விசாரணை தொடர்ந்தும் நடந்து வரும் நிலையிலும் இந்த விடயம் நீதிமன்றத்தின் முன் உள்ள நிலையிலும், இது குறித்து மேலுதிக கருத்துகளை தெரிவிக்க RCMP மறுத்துள்ளது.
இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
