கனடிய இறக்குமதிகளுக்கு வரியை அதிகரிக்கும் அமெரிக்காவின் முடிவு குறித்து கனடிய பிரதமர் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
கனடிய இறக்குமதிகளுக்கான வரியை 35 சதவீதமாக அதிகரிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump வியாழக்கிழமை (31) கையெழுத்திட்டார்.
அமெரிக்காவின் இந்த முடிவு குறித்து கனடிய பிரதமர் Mark Carney வெள்ளிக்கிழமை (01) தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
Fentanyl கடத்தலைத் தடுக்க கனடா தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்ற Donald Trump அரசின் தொடர் குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக இந்த புதிய வரி அறிவித்தல் வெளியானது.
இந்த நிலையில் அமெரிக்காவின் முடிவு குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்திய Mark Carney, இதனால் பாதிக்கப்பட்ட துறைகளை ஆதரிப்பதற்கு தனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என கூறினார்.
இந்த நடவடிக்கையால் கனடிய அரசாங்கம் ஏமாற்றமடைந்தாலும், உலகின் இரண்டாவது பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தமான அமெரிக்கா-Mexico-கனடா வர்த்தக ஒப்பந்தத்தில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம் என Mark Carney தெரிவித்தார்.
August மாதம் 1-ஆம் திகதிக்குள் கனடா அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை எட்டாவிட்டால் 35 சதவீத வரிகளை விதிக்கவுக்கவுள்ளதாக Donald Trump கடந்த சில வாரங்களாக எச்சரித்து வருகிறார்.
கனடா தனது அனைத்து ஏற்றுமதிகளில் சுமார் 75 சதவீதத்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வது குறிப்பிடத்தக்கது.
