Tel Aviv-விலிருந்து அனைத்து அத்தியாவசியமற்ற ஊழியர்களையும் வெளியேறுமாறு கனடா வலியுறுத்தியது.
அதிகரித்த பாதுகாப்பு நிலைமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரு பெரிய தாக்குதலைத் சனிக்கிழமை (28) ஆரம்பித்தது.
இந்தத் தாக்குதல் குறித்த செய்திகள் வெளியாவதற்கு முன்னதாகவே, Tel Aviv-விலிருந்து அனைத்து அத்தியாவசியமற்ற ஊழியர்களையும் வெளியேறுமாறு கனடிய மத்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டதாக அனிதா ஆனந்த் கூறினார்.
மத்திய கிழக்கில் வேறு இடங்களில் உள்ள இராஜதந்திரிகளுக்கு இந்த கோரிக்கை அறிவுரை நடைமுறையில் இல்லை என அந்த நேரம் கனடா தெரிவித்திருந்தது.
இருந்த போதிலும் எந்த நேரத்திலும் அந்த நிலை மாறக் கூடும் என்வும் அனிதா ஆனந்த் கூறினார்.
மத்திய கிழக்கில் உள்ள கனடியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்திய அனிதா ஆனந்த், உள்ளூர், சர்வதேச ஊடகங்களைக் கண்காணிக்க வேண்டும் எனவும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் எனவும் கோரினார்.
வணிக விமான சேவைகள் நடைமுறையில் இருக்கும் வரை இஸ்ரேல், லெபனான், பாலஸ்தீனத்தில் உள்ள கனடியர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் அனிதா ஆனந்த் கூறினார்.
தீவிர மோதலின் போது கனடியர்களுக்கு தூதரக சேவைகளை வழங்குவது சாத்தியமற்றது என குறியிட்ட கனடிய வெளிவிவகார அமைச்சர் கனடியர்கள் அரசாங்க உதவியை நம்பியிருக்காது அவசர காலத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மத்திய கிழக்குக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு கனடியர்களை கனடிய அரசாங்கம் எச்சரிக்கிறது.
இந்த எச்சரிக்கையில் Lebanon, Israel, Palestine, Iraq, Qatar, Bahrain, United Arab Emirates, Kuwait, Iran, Syria , Yemen ஆகிய நாடுகள் அடக்குகின்றன.
Oman, Saudi Arabia, Jordan ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கனடியர்கள் எச்சரிக்கப்படுகின்றனர்.
