ஆசிய பயணத்தை ஆரம்பிக்க கனடிய பிரதமர் Mark Carney இந்தியா சென்றடைந்தார்.
சமீபத்திய ஆண்டுகளில் முறிந்த இராஜதந்திர உறவை மீண்டும் கட்டியெழுப்ப இரு நாடுகளும் முயன்று வரும் நிலையில் கனடிய பிரதமர் வெள்ளிக்கிழமை (27) இந்தியா சென்றடைந்தார்.
மும்பை சென்றடைந்த பிரதமரையும் அவரது துணைவியாரையும் விமான நிலையத்தில் மகாராஷ்டிரா அரசின் நெறிமுறை அமைச்சர் Jaykumar Rawal மலர்கள் வழங்கி வரவேற்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்துடனான இராஜதந்திர உறவை மீட்டெடுப்பதற்கான தனது அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை Mark Carney அங்கு தொடரவுள்ளார்.
இரு தலைவர்களும் அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் தங்கள் நாடுகள் சார்ந்திருப்பதைக் குறைக்க விரும்புகின்றனர்.
March 1-ஆம் திகதி புது டில்லிக்குச் சென்று, நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு முன்னர் Mark Carney மும்பையில் இரண்டு நாட்கள் தங்கவுள்ளார்.
பிரதமராக பதவி ஏற்றதில் இருந்து ஏனைய நாடுகளுடன் உறவுகளை பலப்படுத்தும் முயற்சியில் Mark Carney பல நாடுகளுக்கு பயணித்து வருகிறார்.
இந்தியாவுக்கான தனது பயணத்தை முடித்துக் கொண்டு Mark Carney ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ம் பயணிக்கிறார்.
