விமான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக Air Canada, WestJet விமான நிறுவனங்கள் Cuba-வுக்கான விமான சேவைகளை இடைநிறுத்தி உள்ளது.
இந்த நிலையில் கனடியர்கள் ஏழாயிரத்திற்கும் அதிகமானவர்கள் Cuba-வில் சிக்கக் கூடிய அபாய நிலை தோன்றியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (10) முதல் விமானங்களுக்கு எரிபொருள் கிடைக்காது என Cuba அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் விமான நிலைய செயல்பாடுகள் சீர்குலைந்து உள்நாட்டு, சர்வதேச விமான நிறுவனங்கள் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.
Cuba-வில் விமான எரிபொருள் விநியோகத்தில் தற்காலிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கனடிய விமான நிறுவனங்கள் தமது பயண அவசரத் திட்டங்களை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் Cuba-வில் உள்ள கனடியர் பலர் எப்போது நாடு திரும்புவார்கள் என்ற நிலை தோன்றியுள்ளது.
திங்கட்கிழமை (09) நிலவரப்படி, மொத்தம் 7,204 கனடியர்கள் Cuba-வில் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறு பதிவு செய்வது தன்னார்வமானது எனவும் கட்டாயமானது அல்ல எனவும் கூறிய அவர், Cuba-வில் உள்ள கனடியர்களின் மொத்த எண்ணிக்கையை இது குறிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் Cuba-வின் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், கனடியர்களின் பாதுகாப்பை தீவிரமாக எடுத்துக் கொள்கிறது எனவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
