P.E.I. புதிய முதல்வராக Bloyce Thompson பதவியேற்றார்.
முன்னால் முதல்வர் Rob Lantz பதவி விலகிய மறுதினம் வெள்ளிக்கிழமை (12) புதிய முதல்வராக Bloyce Thompson பதவியேற்றார்.
P.E.I. மாகாணத்தின் Progressive Conservative கட்சியின் நிரந்தரத் தலைமைக்கான போட்டியில் ஈடுபடுவதற்காக Rob Lantz தனது பதவியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் மாகாணத்தின் துணைப் பிரதமர் Bloyce Thompson 35-ஆவது பிரதமராக பதவியேற்றார்.
அவர் ஒரே வருடத்தில் P.E.I.-யின் மூன்றாவது பிரதமராகிறார்.
இந்த பதவி ஏற்பு காரணமாக அமைச்சரவை மாற்றம் எதுவும் இடம்பெறவில்லை.
February 7-ஆம் திகதி நடைபெறும் தலைமைத்துவ மாநாட்டில் புதிய நிரந்தர தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை Bloyce Thompson, P.E.I. மாகாண Progressive Conservative கட்சியின் இடைக்காலத் தலைவராக இருப்பார்.
இதன் மூலம் அவர் மாகாண முதல்வராகவும் இந்த காலகட்டத்தில் பதவி வகிக்கிறார்.
முன்னாள் பிரதமர் Dennis King பதவி விலகிய நிலையில், கடந்த February மாதம் முதல் Rob Lantz கட்சியின் இடைக்காலத் தலைவராகவும் மாகாணத்தின் பிரதமராகவும் இருந்தார்.
LJI Reporter ரம்யா சேது
