சுமார் 68 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது குறித்த தகவல்களை மத்திய அரசாங்கம் அனுப்புகிறது.
பொது சேவை ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசாங்கம் 68 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு திட்டமிடப்பட்ட முன்கூட்டியே ஓய்வு பெறும் திட்டம் குறித்த தகவல்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்குத் தகுதியுடையவர்களாக இருக்கக்கூடிய பொது ஊழியர்களுக்கு குறிப்பிட்ட கடிதங்கள் அனுப்பப்படுவதை கருவூல வாரியத் தலைவர் அலுவலகத்தின் தகவல் தொடர்பு இயக்குனர் உறுதிப்படுத்தினார்.
மத்திய அரசாங்கம் 2023 -ஆம் ஆண்டில் 368,000 பதவிகளாக இருந்த உச்ச நிலையிலிருந்த பொது சேவை ஊழியர்களின் எண்ணிக்கையை சுமார் 40 ஆயிரத்தால் குறைக்க திட்டமிட்டுள்ளது.
ஓய்வூதிய அபராதம் இல்லாமல் தொழிலாளர்கள் முன்கூட்டியே ஓய்வு பெற அனுமதிக்கும் ஒரு தன்னார்வ திட்டத்தை வழங்குவதன் மூலம், வேலை நீக்க விகிதத்தை அதிகரிக்கவும், இளைய தொழிலாளர்களுக்கு வேலை குறைப்பைத் தவிர்க்கவும் அரசாங்கம் முயற்சிக்கிறது.
இந்த ஒரு வருட திட்டத்தை எதிர்வரும் January மாதத்தில் செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வரவு செலவுத் திட்டம் கூறுகிறது.
ஆனாலும் இந்தத் திட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
LJI Reporter ரம்யா சேது
