ஆயிரக்கணக்கான KG சட்டவிரோத போதைப் பொருட்களை கனடிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
RCMP செவ்வாய்கிழமை (02) வெளியிட்ட ஒரு செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் வெளியானது.
National Fentanyl Sprint 2.0 என அழைக்கப்படும் ஒரு நடவடிக்கையின் போது இந்த பறிமுதல் நிகழ்ந்தது என RCMP தெரிவித்துள்ளது.
21 கனடிய சட்ட அமுலாக்க முகவர்களை உள்ளடக்கிய இந்த நடவடிக்கை May 20 முதல் October 31 வரை நடைபெற்றது.
இதில் 386 KG fentanyl, 5,989 KG cocaine,1,708 KG methamphetamine ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சட்டவிரோத போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் 8,136 கைதுகளும் குற்றச்சாட்டுகளும் பதிவாகியுள்ளன.
Fentanyl கடத்தியதற்காக பிணையில் இருந்த 217 நபர்கள் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.
தவிரவும் $13.46 மில்லியன் பணமும் இந்த நடவடிக்கையில் மீட்கப்பட்டது.
LJI Reporter ரம்யா சேது
