November 21 -ஆம் திகதியை தமிழீழத் தேசியக் கொடி நாளாக Brampton நகரம் அங்கீகரித்துள்ளது.
இதற்கான சுற்றுநிருபம் Brampton நகர சபையால் புதன்கிழமை (19) வெளியிடப்பட்டது.
Brampton நகர முதல்வர் Patrick Brown இந்த பிரகடனத்தை நகர சபை அமர்வின் போது அறிவித்தார்.

உலகத் தமிழர் உரிமைக் குரல் அமைப்பு இதைக்கான முன்முயற்சிகள் எடுத்திருந்தது
November 21-ஆம் திகதி தமிழீழத் தேசியக் கொடி நாளாக விடுதலை புலிகள் அமைப்பினால் 1990-ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
LJI Reporter ரம்யா சேது
