இலங்கைக்கான புதிய கனடிய உயர் ஸ்தானிகர் உத்தியோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார்.
இலங்கைக்கான புதிய கனடிய உயர் ஸ்தானிகராக Isabelle Martin அண்மையில் நியமிக்கப்பட்டார்.
அவர் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து தனது பதவி ஏற்பு கடிதத்தை வழங்கினார்.

நல்லிணக்கத்தை நோக்கிய பொருளாதார வளர்ச்சி, நல்லாட்சியை ஊக்குவிப்பதற்கும் இலங்கையின் முயற்சிகளை ஆதரிப்பதில் கனடா உறுதிபூண்டுள்ளது என இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்தது.
