வடக்கு Vancouver தீவில் வெள்ளிக்கிழமை (24) அதிகாலை இராணுவ உலங்கு வானூர்தி மூலம் எட்டு பேர் மீட்கப்பட்டனர்.
இலையுதிர் கால மழையால் வடக்கு Vancouver தீவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது.
இதனால் மின் கம்பிகள் முறிந்ததுடன், சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.
அவசர நிலை மேலாண்மை, கால நிலை தயார் நிலை அமைச்சகம் வியாழக்கிழமை (23) இரவு உலங்குவானூர்தி மீட்புப் பணியை கோரியது.
தீவின் தொலைதூர வடமேற்கு முனையில் நிலச்சரிவுகளால் துண்டிக்கப்பட்ட சாலையில் எட்டு பெரும் ஒரு வாகனத்தில் சிக்கி இருந்தனர்.
இராணுவ உலங்கு வானூர்தி மூலம் மீட்கப்பட்ட எட்டு பேரும் அவசர உதவி பிரிவினரிடம் கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் மீட்கப்பட்டவர்களின் நிலை குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
