தேசியம்
செய்திகள்

Parking அமுலாக்க அதிகாரி மீதான தாக்குதல் விசாரணையில் தமிழர் கைது

Toronto காவல்துறையின் Parking அமுலாக்க அதிகாரி மீதான தாக்குதல் விசாரணையில் தமிழர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

41 வயதான நிசாந்தன் சத்தியபால் என்பவர் இந்த குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.

கடந்த திங்கட்கிழமை மதியம் அளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

வாகனம் ஒன்று சட்டவிரோதமாக நிறுத்தப்பட்டதை கவனித்து, Parking அமுலாக்க அதிகாரி விதிமீறல் தண்டனை சீட்டை வழங்க முற்பட்ட போது அவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் குற்றம் சாட்டப்பட்ட நிசாந்தன் சத்தியபால் Toronto காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இவர் தன் மீதான குற்றச்சாட்டை எதிர்வரும் April மாதம் 6ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளார்.

இவர் மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

OREA மாநாட்டில் இளவரசர் உரை!

Lankathas Pathmanathan

குறைந்தது வேலையற்றோர் விகிதம்!

Lankathas Pathmanathan

50 மில்லியன் டொலர் மதிப்புள்ள opium பறிமுதல்

Lankathas Pathmanathan

Leave a Comment