தேசியம்
செய்திகள்

Manitoba கத்திக் குத்தில் இருவர் பலி!

Manitoba முதல் குடி பகுதியில் நடந்த கத்திக் குத்தில் சந்தேக நபர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

வியாழக்கிழமை (04) காலை நடந்த  கத்திக்குத்தில் மேலும் ஆறு பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

வியாழன் காலை பலர் கத்தியால் குத்தப்பட்டதை Manitoba RCMP உறுதிப்படுத்தியது.

இதில் ஆறு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் – ஒருவர் உயிரிழந்துள்ளார் என RCMP தெரிவித்தது.

இதில் சந்தேக நபரும் இறந்துவிட்டதாக RCMP தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்த அதிகாரிகள் தகவல்களைச் சேகரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தில் January 4 முதல் Ontarioவில் மாற்றம்

Lankathas Pathmanathan

Montreal அடுக்குமாடி கட்டிட தாக்குதலில் 2 பெண்கள் கொலை – ஒருவர் காயம்

Lankathas Pathmanathan

மத்திய வங்கி வட்டி விகிதத்தில் இந்த வாரம் மாற்றம்?

Lankathas Pathmanathan

Leave a Comment