Manitoba முதல் குடி பகுதியில் நடந்த கத்திக் குத்தில் சந்தேக நபர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
வியாழக்கிழமை (04) காலை நடந்த கத்திக்குத்தில் மேலும் ஆறு பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
வியாழன் காலை பலர் கத்தியால் குத்தப்பட்டதை Manitoba RCMP உறுதிப்படுத்தியது.
இதில் ஆறு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் – ஒருவர் உயிரிழந்துள்ளார் என RCMP தெரிவித்தது.
இதில் சந்தேக நபரும் இறந்துவிட்டதாக RCMP தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த அதிகாரிகள் தகவல்களைச் சேகரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
