பிரதமரின் தலைமை அதிகாரியாக முன்னாள் ஐ.நா. தூதர் Marc-André Blanchard நியமிக்கப்பட்டார்.
பிரதமர் Mark Carney இந்த நியமனத்தை ஞாயிற்றுக்கிழமை (01) அறிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபைக்கான கனடாவின் முன்னாள் தூதரும் நிரந்தர பிரதிநிதியுமான Marc-André Blanchard, July மாதம் முதல் கனடிய பிரதமரின் தலைமை அதிகாரியாக பணியாற்றுவார்.
கனடாவின் மிகவும் திறமையான இராஜதந்திரிகளில் ஒருவராக Marc-André Blanchard நீண்ட காலம் செயலாற்றியவர் என Mark Carney கூறினார்.
முன்னாள் அமைச்சர் Marco Mendicino, பிரதமரின் இடைக்கால தலைமை அதிகாரியாக பணியாற்றி வருகின்றார்.
இவர் விரைவில் பதவி விலக உள்ளதாக அண்மையில் அறிவித்த நிலையில் இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
