September 7, 2026
தேசியம்
செய்திகள்

பிரதமரின் தலைமை அதிகாரியாக முன்னாள் ஐ.நா. தூதர் நியமனம்!

பிரதமரின் தலைமை அதிகாரியாக முன்னாள் ஐ.நா. தூதர் Marc-André Blanchard நியமிக்கப்பட்டார்.

பிரதமர் Mark Carney இந்த நியமனத்தை ஞாயிற்றுக்கிழமை  (01) அறிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான கனடாவின் முன்னாள் தூதரும் நிரந்தர பிரதிநிதியுமான Marc-André Blanchard,  July மாதம் முதல் கனடிய பிரதமரின் தலைமை அதிகாரியாக பணியாற்றுவார்.

கனடாவின் மிகவும் திறமையான இராஜதந்திரிகளில் ஒருவராக Marc-André Blanchard நீண்ட காலம் செயலாற்றியவர் என Mark Carney கூறினார்.

முன்னாள் அமைச்சர் Marco Mendicino, பிரதமரின் இடைக்கால தலைமை அதிகாரியாக பணியாற்றி வருகின்றார்.

இவர் விரைவில் பதவி விலக உள்ளதாக அண்மையில் அறிவித்த நிலையில் இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தொற்றுக்கான சுய கண்காணிப்பில் பிரதமர்!

Lankathas Pathmanathan

100 நாட்களுக்குள் நகரசபை தேர்தல்

கனடிய ஆளுநர் நாயகம் Norway, Denmark, Greenland நாடுகளுக்கு பயணம்!

Lankathas Pathmanathan

Leave a Comment