தேசியம்
செய்திகள்

பிரதமரின் தலைமை அதிகாரியாக முன்னாள் ஐ.நா. தூதர் நியமனம்!

பிரதமரின் தலைமை அதிகாரியாக முன்னாள் ஐ.நா. தூதர் Marc-André Blanchard நியமிக்கப்பட்டார்.

பிரதமர் Mark Carney இந்த நியமனத்தை ஞாயிற்றுக்கிழமை  (01) அறிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான கனடாவின் முன்னாள் தூதரும் நிரந்தர பிரதிநிதியுமான Marc-André Blanchard,  July மாதம் முதல் கனடிய பிரதமரின் தலைமை அதிகாரியாக பணியாற்றுவார்.

கனடாவின் மிகவும் திறமையான இராஜதந்திரிகளில் ஒருவராக Marc-André Blanchard நீண்ட காலம் செயலாற்றியவர் என Mark Carney கூறினார்.

முன்னாள் அமைச்சர் Marco Mendicino, பிரதமரின் இடைக்கால தலைமை அதிகாரியாக பணியாற்றி வருகின்றார்.

இவர் விரைவில் பதவி விலக உள்ளதாக அண்மையில் அறிவித்த நிலையில் இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Towing Truck துறையில் ஊழல் குற்றச்சாட்டு – தமிழரும் ஒருவராம்: OPP

Lankathas Pathmanathan

Delta மாறுபாடு ஆதிக்கம் செலுத்தினால் தொற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும்

Gaya Raja

Patrick Brown மீதான குற்றச்சாட்டுகளை தீர்ப்பதற்கு அனைத்து வாய்ப்பும் வழங்கப்பட்டது: Conservative கட்சி

Leave a Comment