தேசியம்
செய்திகள்

Towing Truck துறையில் ஊழல் குற்றச்சாட்டு – தமிழரும் ஒருவராம்: OPP

Towing Truck துறையில் நிகழ்ந்ததாக கூறப்படும் ஊழல் குறித்த குற்றச்சாட்டை தமிழர் ஒருவரும் எதிர்கொள்கின்றார்.

52 வயதான சுதேஷ்குமார் சிதம்பரம்பிள்ளை என்ற தமிழர் மீதும் Ontario மாகாண காவல்துறை (OPP) குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது. Steve பிள்ளை என்ற பெயரை உபயோகிக்கும் இவர் Highway 400 and Sheppard சந்திப்புக்கு அருகாமையில் அமைந்துள்ள Steve’s Towing என்ற நிறுவனத்தின் உரிமையாளராவார்.

Steve’s Towing நிறுவனம்

நேற்று (சனி), OPP Towing Truck துறையில் நிகழ்ந்ததாக கூறப்படும் ஊழல் குறித்து தனது மூத்த அதிகாரிகள் மூன்று பேர் மீது குற்றச் சாட்டுக்களை பதிவு செய்ததுடன் நான்கு பேரை பணி இடைநீக்கம் செய்திருந்தது. Toronto பெரும்பாக பகுதிக்குள் உள்ள Towing நிறுவனங்களுக்கு குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் முன்னுரிமை அளித்ததாக OPP குற்றம் சாட்டுகின்றது.

சிதம்பரம்பிள்ளை April மாதம் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

தமிழர் பலியான சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கை: Statement by Gary Anandasangaree, Canadian Member of Parliament, on First Anniversary of Easter Sunday Attacks in Sri Lanka:

Lankathas Pathmanathan

17 மாதங்களின் பின்னர் கனடாவுக்குள் அனுமதிக்கப்படும் அமெரிக்கர்கள்!

Gaya Raja

Leave a Comment