Manitoba மாகாணம் முழுவதும் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீ காரணமாக மாகாணம் முழுவதும் அவசரகால நிலையை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணம் முழுவதும் காட்டுத்தீ தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலையில் இந்த அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை (28) மாலை இந்த அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு Manitoba-வில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை சுமார் 17,000 பேரை வெளியேற்றுவதை உள்ளடக்கும் என முதல்வர் Wab Kinew தெரிவித்தார்.
Manitoba மாகாணம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய வெளியேற்றம் இதுவாகும் என அவர் கூறினார்.
