தமிழ் இனப்படுகொலையின் பொறுப்புக்கூறலுக்கான சுதந்திரமான சர்வதேச முயற்சிகளை கனடா தொடர்ந்து ஆதரிக்கும் என பிரதமர் Mark Carney தெரிவித்தார்.
தமிழ் இனப்படுகொலையின் 16-ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார்.
தமிழ் இனப்படுகொலை நினைவு நாளில், இழந்த உயிர்களையும், சிதறிப்போன குடும்பங்களையும், பேரழிவடைந்த சமூகங்களையும், இன்று வரை காணாமல் ஆக்கப்பட்டவர்களாக இருப்போரையும் நாம் நினைவு கூறுகிறோம் என கனடிய பிரதமரின் அறிக்கை குறிப்பிடுகிறது.
“பொறுப்புக்கூறல, உண்மை, நீதி ஆகியவற்றுக்கான சுதந்திரமான சர்வதேச முயற்சிகளை கனடா தொடர்ந்து ஆதரிக்கும் எனவும் அவரது அறிக்கை சுட்டிக் காட்டியது.
தமது அன்புக்குரியவர்களின் நினைவுகளை சுமக்கும் கனடிய தமிழ் சமூகத்தையும், கனடாவின் பல பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ள நினைவு நிகழ்வுகளையும் பிரதமர் Mark Carney தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
