தமிழின அழிப்பு நினைவகம் கனடாவில் திறந்து வைக்கப்பட்டது.
Ontario மாகாணத்தின் Brampton நகரில் உள்ள Chinguacousy பூங்காவில் தமிழின அழிப்பு நினைவகம் சனிக்கிழமை (10) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
பல ஆண்டுகள் காத்திருப்பின் பின்னர் தமிழின அழிப்பு நினைவகம் திறக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழின அழிப்பில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் நினைவாக இந்த தமிழின அழிப்பு நினைவகம் திறக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பல மட்டங்களிலான கனடிய அரசியல்வாதிகள் உட்பட பெருமளவானவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பல்லாயிரக்கணக்கான கனடிய தமிழர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
தமிழின அழிப்பு நினைவகம் தனது நகரத்தில் உருவாகியுள்ளது குறித்து தன் பெருமிதம் அடைவதாக அங்கு உரையாற்றிய Brampton நகர முதல்வர் Patrick Brown தெரிவித்தார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த தமிழின அழிப்பு நினைவகம் அகற்றப்பட்ட பின்னணியில், 2021-ஆம் ஆண்டு இந்த நினைவகத்தை Brampton நகரில் அமைப்பதற்கு Patrick Brown வாக்குறுதி அளித்தார்.
கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT) இந்த நினைவகத்திற்கான உரிமையை கொண்டுள்ளது.
இதை பராமரிப்பதற்கான பொறுப்பையும் NCCT ஏற்றுள்ளது.
