தேசியம்
செய்திகள்

Liberal கட்சி மீது தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த Pierre Poilievre!

“கனடாவை மீட்டெடுக்க” உறுதி அளித்ததன் மூலம் தனது தேர்தல் பிரச்சாரத்தை Conservative   தலைவர் Pierre Poilievre ஆரம்பித்தார்.

கனடாவின் அடுத்த பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு April 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான அறிவித்தலை பிரதமர் Mark Carney ஞாயிற்றுக்கிழமை (23) வெளியிட்டார்.

Pierre Poilievre ஞாயிறு காலை தனது  கட்சியின் பிரச்சாரத்தை Québec மாகாணத்தின் Gatineau நகரில் ஆரம்பித்தார்.

Liberal கட்சி மீது தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், வரிகளைக் குறைப்பதாகவும், வாழ்க்கையை இன்னும் கட்டுப்படியாகச் செய்வதாகவும் அவர் தனது முதலாவது தேர்தல் பிரச்சார உரையில் குறிப்பிட்டார்.

சமீபத்திய வாரங்களில் கருத்துக் கணிப்புகளில் Conservative கட்சியின் ஆதரவு பின்னடைவை கண்டு வரும் நிலையில் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

Related posts

கனேடிய பெண்கள் கால்பந்து அணி தங்கம் வெற்றி

Gaya Raja

ஹைட்டி நெருக்கடியை எதிர்கொள்ள கனடா ஆதரிவளிக்க வேண்டும்

Lankathas Pathmanathan

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதை வரவேற்கும் CTC!

Lankathas Pathmanathan

Leave a Comment