தேசியம்
செய்திகள்

Pride பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக $1.5 மில்லியன் நிதியுதவி

Pride பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 1.5 மில்லியன் டொலர்களை உதவியாக கனடிய அரசாங்கம் வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள Pride அமைப்புகளுக்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மத்திய அரசு இந்த உதவிகளை வழங்குகிறது.

LGBTQ2S+ வெறுப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.

நிகழ்வு காப்பீட்டுக்கான செலவுகள், அவசர கால திட்டமிடல், கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை, ஊழியர்கள், தன்னார்வலர்களுக்கான பயிற்சி ஆகியவற்றிற்கான அதிகரித்து வரும் செலவுகளை ஈடுகட்ட இந்த நிதியை பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது.

திங்கட்கிழமை (03) நாடாளுமன்றத்தில் Pride கொடி ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பெண்கள், பாலின சமத்துவம், இளைஞர்களுக்கான அமைச்சர் Marci Ien இந்த நிதி உதவியை அறிவித்தார்.

Pride கொடி ஏற்றப்படுவது Liberal அரசாங்கத்தின் கீழ் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஒரு வருடாந்த நிகழ்வாக  மாறியுள்ளது.

Related posts

கனடிய தமிழர்களின் பங்களிப்பை அங்கீகரித்துக் கொண்டாடும் காலம் இது: பொங்கல் செய்தியில் பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Ontario: வீட்டில் முடக்குவதற்கான உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு

Gaya Raja

B.C. NDP அரசாங்கத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment