September 2, 2026
தேசியம்
செய்திகள்

கனடிய  சீக்கிய தலைவர் கொலை குற்றவாளிகள் நால்வர் நீதிமன்றத்தில்

கனடிய  சீக்கிய தலைவரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு இந்தியர்கள் செவ்வாய்க்கிழமை (21) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Karan Brar, Kamalpreet Singh, Karanpreet Singh, Amandeep Singh ஆகியோர் இந்த கொலை குறித்த குற்றச் சாட்டில்  நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளனர்.

இவர்கள் நால்வரும் British Columbia சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கொலையின் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர்.

இந்தியாவில் சுதந்திரமான சீக்கிய நாடு அமைப்பது குறித்து வெளிநாடுகளில் வாக்களிக்கும் முயற்சியின் முக்கிய தலைவராக  Hardeep Singh Nijjar இருந்தார்.

அவர் கடந்த ஆண்டு June மாதம் Surrey நகரில் உள்ள சீக்கிய கோவில் வாகன நிறுத்துமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலையில் இந்திய அரசாங்கத்தின் தலையீடு உள்ளதாக நம்பகமான உளவுத்துறை தகவல்களை கனடிய பிரதமர் Justin Trudeau வெளியிட்டார்

ஆனாலும் இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்து வருகிறது.

Related posts

அமெரிக்காவுடனான உறவையும் – பொருளாதார அச்சுறுத்தல்களையும் எவ்வாறு கையாள்வது? – Liberal தலைமை வேட்பாளர்கள் விவாதம்

Lankathas Pathmanathan

வார விடுமுறையில் 50 millimetres வரை மழை?

Lankathas Pathmanathan

கனடிய இறக்குமதிகளுக்கு வரி விதிக்கும் அமெரிக்க ஜனாதிபதியின் கருத்து ஆச்சரியமளிக்கவில்லை: கனடிய மத்திய அரசு

Lankathas Pathmanathan

Leave a Comment