தேசியம்
செய்திகள்

ஹைட்டியில் அத்தியாவசிய ஊழியர்கள் மாத்திரம் கடமையில் இருப்பார்கள்: Melanie Joly

ஹைட்டியில் தனது இராஜதந்திர உறுப்பினர்களின் எண்ணிக்கையை கனடிய அரசாங்கம் குறைத்து வருகிறது.

கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly வியாழக்கிழமை (14) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

ஹைட்டியின் தலைநகர் Port-au-Prince தூதரகத்தில் அத்தியாவசிய ஊழியர்கள் மாத்திரம் கடமையில் உள்ளதாக அமைச்சர் Melanie Joly அறிவித்தார்.

“இந்த கொந்தளிப்பான சூழ்நிலையில் கனடியர்களுக்கு ஆதரவாக ஹைட்டியில் எங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்ள இது அனுமதிக்கும்” எனவும் அவர் கூறினார்.

“எங்கள் தூதரும் தூதரக குழுவும் Port-au-Princeசில் இருந்து கனடியர்களுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்குவார்கள்” எனவும் Melanie Joly தெரிவித்தார்.

நீண்ட காலத்திற்கு ஹைட்டிய மக்களுக்கு ஆதரவளிக்க கனடா உறுதியுடன் இருப்பதாக அமைச்சர்  கூறினார்.

ஆனால் தற்போதையை உடனடி முன்னுரிமை கனடியர்களின் பாதுகாப்பாகும் என அவர் வலியுறுத்தினார்.

Related posts

நகரசபை தேர்தல் விண்ணப்ப இறுதி திகதி அண்மிக்கிறது

Lankathas Pathmanathan

மேற்கில் இருந்து கிழக்கு வரை பரவும் காட்டுத்தீ புகை!

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – October மாதம் 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை

Lankathas Pathmanathan

Leave a Comment