தேசியம்
செய்திகள்

குழந்தை மரணத்தில் பெற்றோர்கள் மீது கொலை குற்றச்சாட்டு

Fentanyl காரணமாக குழந்தை இறந்ததை அடுத்து, Winnipeg நகரில் பெற்றோர்கள் மீது கொலை குற்றச்சாட்டு பதிவானது.

Winnipeg நகரில் ஒரு வயது சிறுமி Fentanyl காரணமாக குழந்தை இறந்ததை அடுத்து அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

ஒரு வயதுடைய Hanna Boulette, March மாதம் 2023 இல் இறந்ததாக Winnipeg காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து March மாதம் 2023 இல் காவல்துறையினர் விசாரணையை ஆரம்பித்தனர்.

அவசர நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட அந்த சிறுமி வைத்தியசாலையில் இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் பெற்றோர்களை அதிகாரிகள் கைது செய்தனர்.

பெற்றோர் இருவரும் காவலில் உள்ளனர்.
இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

நெடுஞ்சாலை 11 விபத்தில் ஒருவர் பலி – 11 பேர் காயம்

Lankathas Pathmanathan

$4.6 பில்லியன் COVID நிதி உதவியை தகுதியற்றவர்கள் பெற்றுள்ளனர்

Lankathas Pathmanathan

COVID காரணமாக 2022இல் 19 ஆயிரம் இறப்புகள்!

Lankathas Pathmanathan

Leave a Comment