தேசியம்
செய்திகள்

நைஜீரியாவில் உள்ள கனடா உயர் ஸ்தானிகராலய வெடி விபத்தில் 2 பேர் பலி

நைஜீரியாவில் உள்ள கனடா உயர் ஸ்தானிகராலயத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் உள்ள கனடாவின் உயர் ஸ்தானிகராலயத்தில் திங்கட்கிழமை (06) தீ விபத்து ஏற்பட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் அது தீ விபத்து அல்ல; மாறாக ஒரு வெடிவிபத்து என வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

நைஜீரியாவில் உள்ள கனடா உயர் ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் எப்போது ஏற்பட்டது என்பதை அந்த நாட்டின் தலைநகரில் உள்ள தீயணைப்பு அதிகாரி உறுதிப்படுத்தவில்லை.

August 2022 நிலவரப்படி, அபுஜாவில் 12 கனேடிய தூதர்களும் உள்நாட்டில் பணியமர்த்தப்பட்ட 32 ஊழியர்களும் பணியில் இருந்தனர்.

Related posts

உக்ரைன் குறித்து விவாதிக்கும் கனடிய –  அமெரிக்கா

Lankathas Pathmanathan

ரஷ்யாவுக்கு எதிரான போர் மிக முக்கியமான கட்டத்தில் உள்ளது: கனடாவுக்கான உக்ரைன் தூதுவர்

Lankathas Pathmanathan

British Colombiaவின் சில பகுதிகளில் மீண்டும் முக கவசங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது!

Gaya Raja

Leave a Comment